இறந்தவர்களை அவமதித்ததாக சில
ஜெர்மனிய இராணுவத்தினர் மீது வழக்கு
தொடுக்கப்பட்டதாக சில தினங்களுக்கு-13-
முன்பு செய்திகள் சொல்லப்பட்டன. ஆப்
கானிஸ்தானில் இருக்கின்ற சில ராணு
வத்தினர் மண்டை ஓட்டை வைத்து உதை
பந்தாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு. போர்
களத்தில் பிடிபடுகின்ற எதிரியை கௌர
வமாக நடத்துவதும், கைப்பற்றப்படுகின்ற
எதிரியின் உடல்கள் கௌரவமான முறை
யில் பாதுகாத்து எதிர்தரப்பினரிடம் கைய
ளிப்பது அல்லது இறுதிச்சடங்கு நடத்தப்பட
வேண்டும் என்பதுவும் யுத்தவிதி.
இலங்கையின் யுத்த வரலாற்றில் கைப்
பற்றப்படுகின்ற எதிரியின் உடல்கள் கௌர
வமான முறையில் ராணுவ மரியாதையுடன்
அடக்கம் செய்யப்படுகின்றனவா, என்னும்
கேள்வி எம்மில் யாருக்கேனும் இருக்கி
றதா?
அண்மையில் முகமாலைச்சண்டையில்
உருக்குலைந்த சிங்கள இராணுவத்தினரின்
சில உடல்களை இராணுவமரியாதையுடன்
அடக்கம் செய்ததாக புலிகளின் இராணுவப்
பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தி
ருந்தார். அதே போன்று விடுதலைப் புலி
களால் பொறுப் பேற்கப்படாத சில உடல்
களை, கருணா பிரவினரும் இராணுவ மரி
யாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதாக
அவர்கள் சார்பு ஊடங்களில் படிக்க முடி
ந்தது. இவைகள் யாவும் செய்திகள் தான்
அன்றி, ஆதார ப+ர்வமாக காண்பிக்கின்ற
வீடியோ காட்சிகளோ, அன்றி புகைப்பட
ங்களோ, டிஜிடல் படங்களோ எவரும் இது
வரை வெளியிட்டதை நான் பார்க்க
வில்லை. இது எனது பார்வையின் குறை
பாடா, அல்லது உண்மையிலேயே காட்சிப்
படங்கள் இல்லையோ தெரியாது.
விடுதலைப்புலிகளால் கைது செய்யப்
பட்ட, எண்ணிக்கையில் குறைவான மிகச்
சில ராணுவத்தினர் அரசிடம் மீள ஒப்ப
டைக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள்
ராணுவ கைதியாகவே கருதப்பட்டு நாகரீக
முறையில் நடத்தப்பட்டதாக சாட்சியங்கள்
ஆதார ப+ர்வமாக சொல்கின்றன. சம்பந்
தப்பட்ட ராணுவத்தினரே வாக்குமூலம் தரு
வதால் நம்பியே ஆக வேண்டும்.
இவையாவும் ஒரு புறம் இருக்க, களத்
தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை
குறைவாக வெளி உலகினருக்கு காண்
பிப்பதற்காக எதிரிகளால் கைப்ற்றப்பட்ட
உடல்களை பொறுப்பேற்க இரு தரப்பின
ரும் மறுத்து விடுகின்ற யுத்தநெறி முறை
யற்ற நிகழ்வுகளும் இலங்கையில் அதிகம்
தடவை நடைபெற்று இருக்கிறது.
இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட
எண்ணிக்கையில் ஐம்பதை தாண்டிய புலி
போராளிகளின் உடல்களை இணையத்த
ளம் ஒன்றில் பார்க்க நேர்ந்தது. அவர்கள்
பொது மக்கள் என புலிகள் மறுத்துவிட,
அவ்வுடல்களை இராணுவத்தின் மிகவும்
அவமதித்திருந்தனர். பெண் போராளிகளின்
ஆடைகள் அவிழ்கப்பட்டும், அவயங்கள்
தெரியும் படியாகவும் புகைப்படங்கள் எடுக்
கப்பட்டிருந்தன.
கொழும்பு பத்திரிக்கை ஒன்றினது, முன்
னாள் பத்திரிக்கை நண்பருடன் இது பற்றி
பேசிய போது, அவர் சொன்ன தகவல்
மென்மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
92ம் ஆண்டில் ஆனையிறவு தாக்குதலின்
போது சிக்குண்ட நூற்றுக்கணக்கான புலிப்
போராளிகளின் உடல்கள் இராணுவத்திடம்
சிக்கியிருந்தன.
ஆண், பெண் பேதமின்றி சீருடைகள்
கழையப்பட்ட போராளிகளின் பால் உறுப்
புகள் மீது கால்கள் வைக்கப்பட்டு புகைப்
படம் எடுக்கப்பட்டிருந்தனவாம். இவைகளை
யும் தாண்டி உடல் உறவு கொள்வது
போன்று உயிரற்ற உடல்களை இணைய
வைத்து ஆடப்பட்ட குரூர விளையாட்டுக்
களும் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன.
இவை அனைத்தும் தென் பகுதியில் பரபரப்
பாக அக்கால கட்டங்களில் பார்வையிடப்
பட்டன என்பது எமது வீரத்துக்கப்பாலும்
உரத்துக் கேட்கும் அவலம்.
மரணம் என்பது உணர்வு பூர்வத்தின்
எல்லை கடந்த துயரம். உடல்களை
கேலிக்குள்ளாக்குவதும் சிதைத்து விளை
யாடுவதும் போரியலின் ஒரு பகுதியென்று
தெரிந்து பின்னும், எண்ணிக்கையில் வீரம்
பார்ப்பதை தவிர்த்து, உடல்கள் உடனேயே
பொறுப்பேற்கப்பட வேண்டும். எவ் உடல்
கள் ஆயினும் மரியாதைக்குரியவையே.
உடல் என்னும் சொல்லை உடலம் என்று
விட்டால் மட்டும் மரியாதை பெற்று விடாது.
உலகை உலுக்கிய, சோழர் காலத்தை
மீள மீட்டனர் என புலம்பெயர்ந்தவர்களால்
புகழப்பட்ட காலி துறைமுக தாக்குதலில்
பலி கொள்ளப்பட்ட கடல் புலிகளின் உட
ல்கள் கூட யாராலும் பொறுப்பேற்கப் பட
வில்லை. இது மாவிரர் மாதமாம்.
Thursday, October 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
unkalai enkeyo parththa gnapakam sir.
Post a Comment