Thursday, October 18, 2007

பிள்ளையார் நாமம் ரச்சிக்கப்படுவதாக.

ரோமானிய பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி
செய்து கொண்டிருக்கிறார் என ய+தர்கள்
நம்பிய யேசு கிறிஸ்துவிடம் அவரை மடக்
குவதற்காக சென்றவர்கள். அரசனுக்கு வரி
கொடுக்கவேண்டுமா எனக் கேட்கின்றனர்.
யேசுவினுடைய பதிலைப் பொறுத்து
அவரை கோவிலுக்கெதிராகவோ அல்லது
அரசனுக்கெதிராகவோ மாட்டிவிடலாம் என
எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் கிறிஸ்து
அரசனுக்கு கொடுக்க வேண்டியதை அர
சனுக்கு கொடு, கடவுளுக்கு கொடுக்க
வேண்டியதை கடவுளுக்கு கொடு என்கி
றார், பூடகமாக.

கிறிஸ்துவுக்குப்பின் விவிலியத்தை எழு
தியவர்கள் இந்தப் பகுதியினூடாக அரச
னுடன் பகைக்கவேண்டாம் என்ற பொருளி
லேயே இந்தப்பகுதிக்கு அழுத்தம் தந்து
எழுதியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை நான் எப்படி மொழிபெயர்த்து
விளங்கிக் கொண்டேன் என்றால், அர
சனுக்கு உரிய வரியை அரசனுக்கு
கொடுக்க வேண்டும். கோயிலுக்கு உரிய
தானத்தை கோயிலுக்கு கொடுக்க வேண்
டும் என்று. இப்பந்தி யேசு காவியமல்ல,
பிள்ளையார் புராணம் என்பதால் மேற்
கொண்டு தொடராது நிற்க.

ரொராண்டோ பெரும் பாகத்திலிருக்
கின்ற சில தமிழ் சைவ திருத்தலங்கள்
கோயிலின் பெயரால் தானத்தைப்
பெற்றுக்கொண்டு அரசருக்கு வழங்க
வேண்டிய வரியை ஏய்ப்பதற்கு வழி செய்து
தருகின்றன. இத்தகவல் எம் போன்ற மத
அடையாளம் தவிர்த்தவர்களுக்கு புதிதா
கவும் ஆச்சரியமும் தருவதாகவும் இருந்
தாலும், பெரும்பான்மை பக்தகோடிகள் இத்
திட்டத்தால் பயனடைந்து கொண்டுதானிருக்
கிறார்கள்.

தொண்டு நிறுவனமாகவும், இலாபம்
அற்ற அமைப்பாகவும் பதிவு செய்யப்பட்
டிருக்கும் கோயில்கள், தங்களுக்கு வழங்
கப்பட்டுருக்கும் வரிச்சலுகைகளை பயன்ப
டுத்தி வரி ஏய்ப்பு செய்வது மட்டுமல்லா
மல்லாமல், வாடிக்கை பக்தர்களிடம் சிறி
யதொகையை பெற்றுக்கொண்டு பெரிய
தொகையை அரசிடமிருந்து மீளப்பெற்றுக்
கொள்ளவும் வரிச் ரசீதுகள் வழங்குகின்
றன.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோயில்
கள் பற்றி சர்ச்சை எழுந்தபோது, கோயில்
நிர்வாகி ஒருவருடன் விவாதம் பண்ண
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வாதம்
முற்றிய நிலையில் கோபம் கொண்ட அவர்
அனேக கோயில்கள் இங்கு நட்டத்தில்தான்
ஒடிக்கொண்டிருக்கிறதென்று உமக்கு தெரி
யுமா என்றார். அப்டியானால் வியாபாரத்தை
மாற்றலாமே என்று நான் சொன்னதும்
என்னுடன் பேச்சை துண்டித்துக்கொண்டார்.
ஆலயம் என்பதன் உண்மை அர்த்தம்
தான் என்ன? வரம் பெற்றுக்கொள்கின்ற
இடமா? ஆன்மா கூடும் இடமா? கூட்டுப்
பிரார்த்தனை செய்யுமிடமா? அன்னதானம்
கிடைக்குமிடமா? பாபமும் கறுமமும்
போக்குமிடமா? தியானம் செய்யுமிடமா?
அல்லது நட்டத்திலோ லாபத்திலோ
ஒடிக்கொண்டிருக்கும் வியாபார நிலையம்
தானா?

கோயில்கள் பற்றிய சர்ச்சை என்பது
நேற்று இன்றானதல்ல. கோயில்கள் தோன்
றிய காலம்தொட்டே கோயில்கள் மீது
காட்டமான விமர்சனமும் கேள்விகளும்
இருந்து கொண்டே இருக்கின்றன. புத்தர்,
யேசு, திருமூலர், தமிழில் இருந்த அனேக
சித்தர்கள் உட்பட அனேகம் அறிஞர்கள்
கோயில் எதிர்ப்பாளர்களே. ஆனாலும்
புதிய புதிய மதங்களும் கோயில்களும்
எழுந்தன. எழுந்த வண்ணமே இருக்கின்
றன.

ஹரிநாத், பத்ரிநாத் போன்ற இமால
யத்தலங்களில் பெரிய கோடீஸ்வரர்கள்
அங்கு அலைந்து கொண்டிருக்கும் ஆயி
ரக்கணக்கான ஆண்டிகளுக்கு, நாள்
தோறும் உணவும் கம்பளிப் போர்வையும்
ட்ரக் வண்டிகளில் கொண்டுவந்து கொடுப்
பதை பார்த்திருக்கிறேன். தங்கள் பாவத்
தைப் போக்க இதுவே வழியென்பது அவர்
களது நம்பிக்கை. ஆஸ்திகர்களே கோயில்
என்கிற தங்களது கற்பிதம், கருத்தியலுக்
கப்பால் தங்களது பிரார்த்தனைக்கு பிள்
ளையாரே வரிப்பணம் மீளக் கொடுத்தார்
என்று நம்புவதுமே புதிய புதிய கோயில்கள்
தோன்றுவதற்கான அழுத்தமான முதற்கார
ணங்கள்.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது